×

திருமணமான 4 மாதத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்குப்போட்டு சாவு

கடலூர், மே 9: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் லோகேஷ்(27), சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு கவிதா (26) என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 24.1. 2024ல் திருமணம் நடைபெற்றுள்ளது. கவிதாவும் சாப்ட்வேர் இன்ஜினியராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4ம் தேதி லோகேஷ் வீட்டை விட்டே வெளியே சென்று விட்டார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடலூர் முதுநகர் சோனங்குப்பம் கடற்கரை அருகே உள்ள ஒரு சவுக்கு மரத்தில் லோகேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரத்திலிருந்து லோகேஷ் கடலூருக்கு வந்து தற்கொலை செய்து கொள்ள காரணம் என்னவென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமணமான 4 மாதத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்குப்போட்டு சாவு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Lokesh ,Vasudevan ,Kanchipuram ,Kavita ,Chennai ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்